FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார். 

7 பிப்ரவரி 2024, 8:52 pm IST
பகிர்:

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார். 
முதல் சுற்றில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர், 12-21, 21-18, 21-16 என்ற கேம்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவரும், இந்தோனேசிய வீரருமான ஜோனதன் கிறிஸ்டியை சாய்த்து அசத்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 5 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக, ஹாங்காங்கின் முன்னாள் உலகின் நம்பர் 1 வீரரான நிக் கா லாங் அங்கûஸ சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். 
எனினும் மகளிர் ஒற்றையரில், தகுதிச்சுற்று வீராங்கனையான இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என சீனாவின் ஜாங் யி மானிடம் வீழ்ந்தார். 
ஆடவர் இரட்டையரில் எம்.ஆர்.அர்ஜுன்/துருவ் கபிலா இணை 16-21, 19-21 என்ற கேம்களில் சீன தைபேவின் ஃபாங் சி லீ/ஃபாங் ஜென் லீ கூட்டணியிடம் வெற்றியை இழந்தது. 
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-13, 21-16 என மலேசியாவின் ஃபிரான்செஸ்கா கோர்பெட்/அலிசன் லீ ஜோடியை சாய்த்தது. எனினும், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா ஜோடி 12-21, 11-21 என்ற கேம்களில் ஜப்பானின் மயு மட்சுமோடோ/வகானா நகாஹரா இணையிடம் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments