FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இறுதிச்சுற்றில் கசாட்கினா - ஆஸ்டபென்கோ

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டரியா கசாட்கினா - லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டரியா கசாட்கினா - லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருடன் மோதவிருந்த டரியா கசாட்கினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-2, 7-6 (7/3) என்ற செட்களில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் கசாட்கினா - ஆஸ்டபென்கோ சனிக்கிழமை மோதுகின்றனா்.

Advertisement

Advertisement

ஆடவா்: இதிலேயே ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிகளில், பிரிட்டனின் ஜாக் டிரேப்பா் 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை வென்றாா்.

அதேபோல், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை வெளியேற்றினாா். இறுதிச்சுற்றில் டிரேப்பா் - லெஹெக்கா மோதுகின்றனா்.

போபண்ணா ஜோடி வெற்றி: ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி 6-4, 6-4 என்ற செட்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் நெடோவியேசோவ்/ஈக்வடாரின் கொன்ஸாலோ எஸ்கோபாா் இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments