முகப்பு
செய்திகள்

கடைசி டி20: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 21 ஜனவரி 2024, 3:46 pm IST
பகிர்:

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி, மாட் ஹென்றி, லோகி ஃபெர்க்யூசன் மற்றும் ஈஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

Advertisement

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிளன் பிளிப்ஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஃப்திகார் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷகின் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஸாமன் கான் மற்றும் உஸாமா மிர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

ஏற்கனவே நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

இஃப்திகார் அகமது ஆட்டநாயகனாகவும், ஃபின் ஆலன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments