நடுவரை துரத்தி துரத்தி அடித்த வீரர்கள்... பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதல்!
பாகிஸ்தானில் அரையிறுதிப் போட்டியில் வீரர்களிடையே நடந்த மோதல் குறித்து...
பாகிஸ்தானில் நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இரு அணிகளுக்கும் மோதல் வெடித்தது.
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்படுமென பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் கூறியுள்ளது.
கராச்சியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆர்மி அணியும் டபிள்யூஏபிடிஏ அணியும் மோதின.
Advertisement
Advertisement
மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 4-3 என பாகிஸ்தான் ஆர்மி அணி வென்றது.
இறுதி விசில் அடிக்கப்பட்டதும் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ரசித்து பார்த்தமாதிரியான விடியோக்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டன.
இது குறித்து பாகிஸ்தான் ஒலிம்பிக் அசோசியேஷன் கூறியதாவது:
இந்தச் சண்டைக்கும் காரணமான அல்லது சண்டையைத் தொடங்கிய வீரர்கள் மீது எங்களது தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
தவறு உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மற்ற வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு காப்பாற்றும்வரை சில டபிள்யூஏபிடிஏ அணி வீரர்கள் போட்டியின் நடுவரை அவரது அறை வரைக்கும் துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள்.
நடுவரின் பெனால்டி குறித்து தீர்ப்பினால் வாப்டா அணியினர் அதிருப்தி அடைந்ததால் இந்தமாதிரி நடந்ததாகக் கூறப்படுகிறது.
The Pakistan Football Federation and the country's apex Olympic body are probing an ugly incident that took place after a semi-final match between Pakistan Army and the WAPDA team in Karachi, with several players and officials sustaining injuries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.