பாகிஸ்தான் விளையாட்டு ஆணைய இலச்சினை.  படம்: முகநூல் / பாகிஸ்தான் விளையாட்டு ஆணையம்.
செய்திகள்

நடுவரை துரத்தி துரத்தி அடித்த வீரர்கள்... பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதல்!

பாகிஸ்தானில் அரையிறுதிப் போட்டியில் வீரர்களிடையே நடந்த மோதல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இரு அணிகளுக்கும் மோதல் வெடித்தது.

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்படுமென பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் கூறியுள்ளது.

கராச்சியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆர்மி அணியும் டபிள்யூஏபிடிஏ அணியும் மோதின.

மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 4-3 என பாகிஸ்தான் ஆர்மி அணி வென்றது.

இறுதி விசில் அடிக்கப்பட்டதும் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ரசித்து பார்த்தமாதிரியான விடியோக்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டன.

இது குறித்து பாகிஸ்தான் ஒலிம்பிக் அசோசியேஷன் கூறியதாவது:

இந்தச் சண்டைக்கும் காரணமான அல்லது சண்டையைத் தொடங்கிய வீரர்கள் மீது எங்களது தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.

தவறு உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மற்ற வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு காப்பாற்றும்வரை சில டபிள்யூஏபிடிஏ அணி வீரர்கள் போட்டியின் நடுவரை அவரது அறை வரைக்கும் துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள்.

நடுவரின் பெனால்டி குறித்து தீர்ப்பினால் வாப்டா அணியினர் அதிருப்தி அடைந்ததால் இந்தமாதிரி நடந்ததாகக் கூறப்படுகிறது.

The Pakistan Football Federation and the country's apex Olympic body are probing an ugly incident that took place after a semi-final match between Pakistan Army and the WAPDA team in Karachi, with several players and officials sustaining injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT