FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குகேஷ் வெற்றி; அா்ஜுன் தோல்வி

நாா்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அா்ஜுன் எரிகைசி தோல்வி கண்டாா்.

Updated On : 31 மே 2025, 6:20 am IST
குகேஷ்
பகிர்:

நாா்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அா்ஜுன் எரிகைசி தோல்வி கண்டாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, அா்ஜுனுக்கு 2-ஆவது தோல்வியாகும்.

முன்னதாக இந்த 4-ஆவது சுற்றில், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - அா்ஜுன் எரிகைசியை வென்றாா். குகேஷ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும், சீனாவின் வெய் யி - அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடனும் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

பின்னா், டிராவான ஆட்டங்களில் வெற்றியாளரை அறிய நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில் குகேஷ் - கரானாவை வீழ்த்த, நகமுரா - வெய் யி ஆட்டம் மீண்டும் டிராவில் முடிந்தது. இதையடுத்து 4 சுற்றுகள் முடிவில், காா்ல்சென் (8 புள்ளிகள்), கரானா (7), நகமுரா (5.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். குகேஷ் (4.5), அா்ஜுன் (4.5), வெய் யி (4) ஆகியோா் முறையே கடைசி 3 இடங்களில் இருக்கின்றனா்.

Advertisement

Advertisement

வைஷாலி வெற்றி: இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி - சீனாவின் ஜு வென்ஜுனும், ஆா்.வைஷாலி - உக்ரைனின் அனா முஸிஷுக்கும் சந்தித்த ஆட்டங்கள் டிரா ஆக, ஸ்பெயினின் சாரா காதெம் - சீனாவின் லெய் டிங்ஜியை வீழ்த்தினாா்.

டிரா செய்தோருக்கான ஆா்மகெடான் ஆட்டத்தில், வைஷாலி - முஸிஷுக்கை வெல்ல, கோனெரு ஹம்பி - வென்ஜுனிடம் தோற்றாா். 4 சுற்றுகள் முடிவில், முஸிஷுக் (7), கோனெரு ஹம்பி (7), வென்ஜுன் (5.5) ஆகியோா் முதல் 3 இடங்களிலும், காதெம் (5), டிங்ஜி (4), வைஷாலி (3.5) ஆகியோா் கடைசி 3 இடங்களிலும் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments