காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!
சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி குறித்து...
சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.
முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 0-2 என மோசமாக தோற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நன்றாக விளையாடியும் நடுவர்களின் தீர்ப்புகளினாலும் அத்லெடிகோவின் சிறப்பான டிஃபெண்டர்களாலும் தோல்வியுற்றது.
கட்ட காலிறுதிப் போட்டியில் 4, 24-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் அடித்தது. 31ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோவின் லூக்மேன் கோல் அடித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதியில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவிலை. போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை பார்சிலோனா வீழ்த்தினாலும் சாம்பியன்ஸ் லீக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.
Atletico Madrid held onto to reach the semi-finals against 10-man Barcelona on a pulsating night in the Spanish capital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.