முகப்பு
செய்திகள்

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி குறித்து...

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:58 PM
கால்பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் அத்லெடிகோ, பார்சிலோனா வீரர்கள். - ஏபி
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:42 PM

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 0-2 என மோசமாக தோற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நன்றாக விளையாடியும் நடுவர்களின் தீர்ப்புகளினாலும் அத்லெடிகோவின் சிறப்பான டிஃபெண்டர்களாலும் தோல்வியுற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:47 PM

கட்ட காலிறுதிப் போட்டியில் 4, 24-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் அடித்தது. 31ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோவின் லூக்மேன் கோல் அடித்து அசத்தினார்.

Advertisement

இரண்டாம் பாதியில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவிலை. போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை பார்சிலோனா வீழ்த்தினாலும் சாம்பியன்ஸ் லீக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.

summary

Atletico Madrid held onto to reach the semi-finals against 10-man Barcelona on a pulsating night in the Spanish capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.