காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!
சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி குறித்து...
சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.
முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 0-2 என மோசமாக தோற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நன்றாக விளையாடியும் நடுவர்களின் தீர்ப்புகளினாலும் அத்லெடிகோவின் சிறப்பான டிஃபெண்டர்களாலும் தோல்வியுற்றது.
கட்ட காலிறுதிப் போட்டியில் 4, 24-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் அடித்தது. 31ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோவின் லூக்மேன் கோல் அடித்து அசத்தினார்.
Advertisement
இரண்டாம் பாதியில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவிலை. போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை பார்சிலோனா வீழ்த்தினாலும் சாம்பியன்ஸ் லீக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.