ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!
ஃபிஃபா உலகக் கோப்பையில் குரசாவோவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.
ஃபிஃபா உலகக் கோப்பையில் குரசாவோவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.
ஃபிஃபா நடத்தும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 11 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தினசரி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹூஸ்டனில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற ஜெர்மனி மற்றும் குரசாவோ அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருக்க, அதன் பின் ஜெர்மனி வீரர்கள் தொடர்ந்து வரிசையாக கோல்கள் அடித்தனர். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி வீரர்கள் குரசாவோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை.
Advertisement
Advertisement
ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி 7-1 என்ற கணக்கில் குரசாவோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.