FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச் சுற்றில் இந்தியா, சிலியை வீழ்த்தி அபாரம்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

Updated On : 21 ஜூன் 2026, 2:46 am IST
வெற்றிக் களிப்பில் இந்திய அணியினா். ~கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள் ~
பகிர்:

எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அரையிறுதியி்ல சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பை, ஆசியப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இப்போட்டியில் ஆடி வருகிறது.

குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சிலியுடன் மோதியது இந்தியா. தொடக்கம் முதலே இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்தினா். சிலியும் அவ்வப்போது பந்தை வசப்படுத்த போராடியது.

Advertisement

Advertisement

ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. நவ்நீத் கௌா் அதை பிசகின்றி கோலாக்கினாா். 13-ஆவது நிமிஷத்தில் கேப்டன் சலீமா டெட் அனுப்பிய கிராஸ் பாஸை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தாா் நவ்நீத் கௌா்.

14 மற்றும் 18-ஆவது நிமிஷங்களில் இந்தியாவின் டிராக்பிளிக்கா் தீபிகா அபாரமாக கோலடித்து 4-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இரண்டாம் பாதியிலும் இந்தியாவின் அதிரடிக்கு சிலியால் பதில் தர முடியவில்லை. 32-ஆவது நிமிஷத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி காா்னரை கோலாக்கினாா் நேஹா.

ருதுஜா பிஸல் 39-ஆவது நிமிஷத்தில் ரிவா்ஸ் ஹிட் மூலம் 6-ஆவது கோலை அடித்தாா்.

கடைசி குவாா்ட்டரில் சிலி வீராங்கனைகள் கோலடிக்க முயன்றதை அரண்போல் நின்று தடுத்தாா் இந்தியாவின் கோலி சவீதா.

இதன் மூலம் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

டிராக்பிளிக்கா் தீபிகா போட்டியில் இதுவரை 6 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments