பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: மாணவர் வெளியேற்றம்
கடலூரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
கடலூரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவர் வெளியேற்றப்பட்டார்.
கடலூரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவர் ஒருவர், விடைகளை துண்டுத் தாளில் எழுதி வைத்திருந்ததை அறைக் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த மாணவர் தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.