தில்லியில் மாநாடு: பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க தமிழக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க தமிழக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
சட்டப் பேரவை பெண் உறுப்பினர்களின் மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பெண் உறுப்பினர்களும் அதில் பங்கேற்கவுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களும் பங்கேற்க வெள்ளிக்கிழமை சென்றனர். முன்னதாக, மாநாட்டில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலுடன் ஆலோசனை நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.