நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது!
ஞாயிறு அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம்: ஞாயிறு அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிறு அதிகாலை தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையின் கொடூர தாக்குதலின் காரணமாக தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் கடுமையாக சேதமடைந்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.