முகப்பு
தமிழ்நாடு

விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக்: தமிழக அரசு பெருமிதம்!

விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக் என அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

சென்னை: விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக் என அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கான டாஸ்மாக் நிறுவன ஆண்டறிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

டாஸ்மாக் நிறுவனம் 2015-16 ஆம் ஆண்டில் ரூ.125.64 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. அதே நேரம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.79.13 கோடி லாபம் கிடைத்துள்ளது.

2014-15 ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ 27,820 கோடியாக இருந்தது. 2015-16 ஆண்டில் அந்த வருவாயானது ரூ.30,283 கோடியாக உயர்ந்துள்ளது.

2015-16 ஆண்டில் ரூ. 26,992 கோடி அளவுக்கு மது வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது    

விற்பனை மற்றும் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னணியில் உள்ள நிறுவனமாக டாஸ்மாக் திகழ்கிறது.

இவ்வாறு அந்த ஆண்டறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.