FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிடிபட்ட விநாயகன் யானை கர்நாடக வன எல்லையில் விடுவிப்பு

கோவையில் பிடிபட்ட விநாயகன் யானையை முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் கர்நாடக வன எல்லையில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு வனத்துறையினர் விடுவித்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள கர்நாடக மாநிலம், பந்திப்பூர் எல்லையில் அடர்ந்த வனப் பகுதியில் விடுவிப்பதற்காக லாரியில் இருந்து இறக்கப்படும் யானை விநாயகன்.
பகிர்:


கோவையில் பிடிபட்ட விநாயகன் யானையை முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் கர்நாடக வன எல்லையில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு வனத்துறையினர் விடுவித்தனர்.
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை தாக்கியும் வந்த காட்டு யானை விநாயகனை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை பிடித்தனர். 
விஜய், பொம்மன் ஆகிய கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்ட இந்த யானையை லாரி மூலம் முதுமலைக்கு வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வந்தனர்.
பின்னர், அந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வசீம், கணேஷ், முதுமலை ஆகிய மூன்று கும்கி யானைகளைக் கொண்டு லாரியிலிருந்து இறக்கி கர்நாடக எல்லையிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் இறக்கிவிட்டனர். 
கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில் யானையை வனத்துக்குள் அனுப்பும் பணி நடைபெற்றது. 
புலிகள் காப்பக உதவி இயக்குநர் செண்பகப்பிரியா யானையை விடுவிக்கும் பணியைப் பார்வையிட்டார். காலர் ஐ.டி. பொருத்தப்பட்டுள்ளதால் யானையின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும். மாலை 5.30 மணிவரை யானை நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடுவதாக புலிகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments