FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம்: மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நா

Updated On : 4 டிசம்பர் 2020, 2:40 pm IST
கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு
பகிர்:


சீர்காழி:  கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஈடுபட்டாா்.

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. 

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் உள்ள தைக்கால், புத்தூர், தாண்டவன்குளம், ஆச்சாள்புரம், நல்லூர் , நடுத்திட்டு, கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கவும், தண்ணீரை வடிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க  அறிவுறுத்தினார். ஆய்வின்போது கொள்ளிடம் அதிமுக செயலாளர் நற்குணன், முன்னாள் எம்எல்ஏ சக்தி மற்றும் அதிமுகவினர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments