முகப்பு
தமிழ்நாடு

சென்னை தி.நகர் நகைக் கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு

சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளன.

Updated On : 21 அக்டோபர் 2020, 11:01 am IST
சென்னை தி.நகர் நகைக் கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு
பகிர்:

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளன.

தியாகராய நகரின், மூசா தெருவில் உள்ள உத்தம் நகைக் கடையின் க்ரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அங்கிருந்த 4.125 கிலோ தங்க, வைர நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.  தங்க, வைர நகைகளுடன் 15 தங்கக் கட்டி, 15 வெள்ளிக்கட்டிகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நகைக் கடையின் உரிமையாளர்கள் 3 பேர்  அளித்த புகாரின் பேரில் மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.