சென்னை தி.நகர் நகைக் கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு
சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளன.
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளன.
தியாகராய நகரின், மூசா தெருவில் உள்ள உத்தம் நகைக் கடையின் க்ரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அங்கிருந்த 4.125 கிலோ தங்க, வைர நகைகளை திருடிச் சென்றுள்ளனர். தங்க, வைர நகைகளுடன் 15 தங்கக் கட்டி, 15 வெள்ளிக்கட்டிகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
நகைக் கடையின் உரிமையாளர்கள் 3 பேர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.