FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்

முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான  க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.

Updated On : 17 நவம்பர் 2020, 12:35 pm IST
க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்
பகிர்:


முன்னணித் தமிழ்ப் பதிப்பாளரும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.

பதிப்புலக ஆளுமை என்று கூறப்படும் க்ரியா ராமகிருஷ்ணன், கரோனா பாதித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல புத்தகங்களை வெளிக்கொணர்ந்தவர். புத்தகப் பதிப்புத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

Advertisement

Advertisement

ந. முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது. மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையையும் க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கியவர்.

க்ரியா ராமகிருஷ்ணனின் முயற்சியால் பிரெஞ்ச்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் தமிழில் வந்தன. நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்பாக க்ரியா வெளியிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்கள் அமைந்துள்ளன.

ஆல்பர் காம்யுவின் 'அந்நியன்', முதல் மனிதன்,  சார்த்தரின் ' மீள முடியுமா?', ழாக் ப்ரவரின் 'சொற்கள்', ஜோஷ் வண்டேலூவின் அபாயம் என எண்ணற்ற படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குப் புத்துணர்வூட்டின.

ஐராவதம் மகாதேவன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களைக் க்ரியா வாயிலாக வெளியிட்டிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments