கிருஷ்ணகிரி: பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா இன்று காலை சென்னை நோக்கி பெங்களூரில் இருந்து புறப்பட்டார். பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவருக்கு ஆங்காங்கே அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மேளதாளங்களுடன், வரவேற்க மலர்களுடன் குவிந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.