கிருஷ்ணகிரியில் சசிகலாவை வரவேற்க குவிந்த தொண்டர்கள்
பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா இன்று காலை சென்னை நோக்கி பெங்களூரில் இருந்து புறப்பட்டார். பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவருக்கு ஆங்காங்கே அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மேளதாளங்களுடன், வரவேற்க மலர்களுடன் குவிந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.