வடகிழக்கு பருவமழை: பயிர்ச்சேத விவர அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு
வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. சென்னை, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு பயிர்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் இன்று அளித்தனர்.
இதையடுத்து அறிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.