முகப்பு
தமிழ்நாடு

இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: காவல்துறை தகவல்

மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.

Updated On : 22 செப்டம்பர் 2021, 4:19 pm IST
இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: காவல்துறை தகவல்
பகிர்:


சென்னை: மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.

மக்களுக்கு காவல்துறை என்னதான் எச்சரிக்கைகளை அளித்தாலும், ஆசையோ, அதிகப் பணமோ, ஏதோ ஒன்று ஏற்படுத்தும் விருப்பத்தால் மக்கள் அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுகிறார்கள். பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறார்.

அதற்காகவே, புதுவிதமான மோசடிகள் வந்ததும் அது குறித்து காவல்துறையினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில், நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததாகவோ அல்லது நிறுவன விளம்பரத்திற்காகவோ இலவசமாக அல்லது குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய வந்ததாக கூறும் நபர்களை கண்டிப்பாக வீட்டினுள் அனுமதிக்காதீர்கள்.

அவ்வாறு செய்தால்,  உங்களின் உடைமைகளையோ அல்லது குழந்தைகளையோ இழக்க நேரிடும், விழிப்புடன் இருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.