ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14வது முறையாக அவகாசம் நீட்டிப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 14வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
படிக்க | ஆன்லைன் ரம்மி: பல லட்சம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் கூடுதலாக 3 வார கால அவகாசம் வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.
அதில், ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்கி, ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.