சீர்காழி புறவழிச்சாலையில் புதுச்சேரி அரசு பேருந்தும், தமிழக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் 18க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலையில் கோவில்பத்து அருகே புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும் பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சேதமடைந்துள்ள புதுச்சேரி அரசு பேருந்தின் முன்பகுதி.
நான்கு வழிச் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், அதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலை குறுகியதாக உள்ளதால் இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்த 18-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். காயம் அடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிக்க | கார் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்: ஒருவர் பலி
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.