FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம் சிவன் கோயில்களில் சிவராத்திரித் திருவிழா

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சுவாமி வீதியுலாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மார்ச் 2022, 11:26 am IST
சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் உடனுறை பர்வதவர்த்தினி அம்மன்..
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சுவாமி வீதியுலாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவன் கோயில்கள் உள்ளது. பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் அதன் துணைத்தலைவர் எம்.எஸ்.பூவேந்தன், செயலர் மு.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 4 கால  சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது.

Advertisement

Advertisement

நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில் கோயில் கலையரங்கில் 44வது ஆண்டாக மகாசிவராத்திரியை முன்னிட்டு குடந்தை எஸ்.லட்சுமண முதலியார் உட்பட பலரும் திருமுறை இன்னிசை என்ற தலைப்பில் பக்தி இன்னிசை நடத்தினார்கள்.

பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனை வழிபட்ட பெருமைக்குரிய தலம் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments