முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து 1200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 13 ஏப்ரல் 2022, 8:23 am IST
4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்
பகிர்:


சென்னை: தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து 1200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி நாளை 14 ஆம் தேதியும், நாளை மறுநாள் புனித வெள்ளியையொட்டி 15 ஆம் தேதியும் அரசு விடுமுறை நாளாக உள்ளது.  ஞாயிற்றுக்கிழமை(ஏப் 17) வார விடுமுறை என்பதால் சனிக்கிழமை (ஏப் 16) ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்றும், நாளையும் (ஏப்.13,14)  1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

இதேபோல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17 ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments