செப்.3-ல் கேரளம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
செப்.3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கேரளம் செல்கிறார்.
செப்.3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கேரளம் செல்கிறார்.
கேரள மாநிலம் செல்லும் அவர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
29ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் நடைபெற்ற நிலையில் இந்த முறை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைக் கொண்டது தென் மண்டல குழு.
Advertisement
Advertisement
பொதுவாக, தென்மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார். அதன் துணைத் தலைவர் பொறுப்புக்கு தென்னிந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.