கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 5 நபர்கள் நேரில் அழைத்து சென்று விசாரணை
கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் சென்னையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர்.
கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் சென்னையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். இவர்கள் பி.ஆர்.எஸ். அலுவலகத்தில் உள்ளனர்.
தற்போது கோட்டைமேடு பகுதி ஜி.எம் நகருக்கு முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் பண்டிகை: புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
Advertisement
தற்பொழுது ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களுக்கு தொடர்புடைய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.