தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கரோனா
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. எஞ்சிய 32 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. எஞ்சிய 32 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
படிக்க | விஐடி கல்லூரியில் 118 மாணவர்களுக்கு கரோனா
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது. எனினும் நேற்றைய பாதிப்பை விட இன்று (மே 31) சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,55,474-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 542 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 7,52,533-ஆக அதிகரித்துள்ளது.
6 மாவட்டங்களில் கரோனா
தமிழகத்தில் தற்போது ஆறு மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு (44), சென்னை (46), கோவை (2), காஞ்சிபுரம் (1), திருவள்ளூர் (2), வேலூர் (1) ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.