முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

Updated On : 7 செப்டம்பர் 2022, 6:18 pm IST
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் நகரம் வீரமாகாளி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை(செப்.8) நடைபெறுவதால்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதற்கு பதிலாக 24.9.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.