முகப்பு
தமிழ்நாடு

மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.  

Updated On : 12 செப்டம்பர், 2022 at 1:52 PM
பகிர்:

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இம் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது.

Advertisement

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மதுவிற்பனைக்கு தடை விதிக்க நேரிடும். நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.