உயிரிழந்த மீனவர் ராஜேந்திரன். 
தமிழ்நாடு

கோடியக்கரை: கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு மோதி மீனவர் பலி!

கோடியக்கரைக்கு அப்பால் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.

DIN

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த ராஜேந்திரன்(58) எல்லப்பன் (46),முருகவேல் (40) ஆகிய 3 மீனவர்களும் 12 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் முழ்கியது. 

படகு கடலில் மூழ்கத் தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற இரண்டு மீனவர்களான எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT