தமிழ்நாடு

கோடியக்கரை: கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு மோதி மீனவர் பலி!

DIN

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த ராஜேந்திரன்(58) எல்லப்பன் (46),முருகவேல் (40) ஆகிய 3 மீனவர்களும் 12 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் முழ்கியது. 

படகு கடலில் மூழ்கத் தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற இரண்டு மீனவர்களான எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT