கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை கூடலழகர் கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை கூடல் அழகர் கோயில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN

மதுரை கூடல் அழகர் கோயில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சுசீந்திரன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் மதுரையின் சிறப்பு. இந்த கோயில் வைணவ கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. கோயிலின் குளம் புனிதமாக கருதப்படும் சூழலில், கோயிலை சுற்றி அரசியல் பலம் கொண்ட சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக அமைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தெப்பத் திருவிழாவின் போது இந்த கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  ஆகவே மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருக்குறள்: முதல் மொழிபெயர்ப்பு

இந்த வார ஓடிடி படங்கள்!

தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்? | Vijay Tvk | Madurai

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT