முகப்பு
தமிழ்நாடு

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated On : 17 ஜனவரி 2023, 2:09 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி   நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னப் பிளவு, உதடு பிளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைந்து காதலர்களுக்கு பரிசளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திக் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. புதிய ஒமைக்ரான் உருமாற்றம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவி உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments