தமிழ்நாடு

கோவையில் 6 கார்களில் தீப்பற்றியதால் பரபரப்பு!

கோவையில் 6 கார்களில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவையில் 6 கார்களில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் சாலையில், தனியார் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் என்பவரது சொகுசு கார் பழுது நீக்கப்பட்டது. 

பழுது நீக்கப்பட்ட அந்த காரை அரவிந்த் ஓட்டி பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி உள்ளார். அப்போது சில நொடிகளில் எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றி உள்ளது. 

இதனை அடுத்து  அங்கு பணிபுரிபவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கார்களில் தீ பற்றியது. 

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் தீ பற்றியதன் காரணமாக அதிகளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

SCROLL FOR NEXT