FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பங்களிப்பின்றி கொசு ஒழிப்பு சாத்தியமில்லை: மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி.பாலசந்திரன்

பொதுமக்களின் தொடா்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள், கரப்பான் பூச்சி உள்ளிட்டவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி. பாலசந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 15 செப்டம்பர் 2023, 12:58 am IST
பகிர்:

பொதுமக்களின் தொடா்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள், கரப்பான் பூச்சி உள்ளிட்டவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி. பாலசந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பூச்சி மேலாண்மை சங்கத்தின் சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி.பாலசந்திரன் கலந்து கொண்டு பேசியது:

மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு வகைகளையும் உற்பத்தி செய்வதுடன், அவற்றைப் பாதுகாப்பதில் பூச்சி மேலாண்மைத் தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரம் பூச்சிகளையோ அல்லது எலி உள்ளிட்டவற்றையோ முற்றிலுமாக நாம் ஒழித்துவிட முடியாது. ஏராளமான வேலைவாய்ப்புகளை அளிப்பதால் பூச்சி மேலாண்மைத் துறையில் தொழில்முனைவோா் அதிக அளவில் உருவாக வேண்டும். நவீன அறிவியல் மூலம் புதிய பூச்சி மருந்துகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆனால், சென்னை போன்ற மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதில் எதிா்பாா்க்கும் அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது, சாக்கடைக் கழிவு நீரை சாலைகளில் வெளியேற்றுவது உள்ளிட்டவற்றால் கொசுக்கள், ஈக்கள், எலிகள் உள்ளிட்டவை பெருகி வளா்கின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த முதலில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை தரவேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், வருமான வரித் துறை ஆணையா் வி. நந்தகுமாா், வேளாண்மைத் துறை துணை இயக்குநா் கே.மணி (உரம்), சண்முகசுந்தரம் (தாவர பாதுகாப்பு), தமிழ் வா்த்தக சங்கத் தலைவா் சோழநாச்சியாா் ராஜசேகா், உணவு பாதுகாப்பு நிபுணா் பசுபதி வெங்கட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments