வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மூத்த புகைப்படக்காரர் உயிரிழப்பு
சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி இந்து நாளிதழில்(ஆங்கிலம்) மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றுபவர் கே.வி. என்றழைக்கப்படும் கே.வி.சீனிவாசன்(வயது 56).
சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கும் பணியில் இன்று காலை 4.30 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், கோயில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இவர் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.