பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை: ஏன் தெரியுமா?
ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இதையும் படிக்க | பைக்கில் சென்றவர் மீது கார் மோதி 12 கி.மீ. இழுத்துச் சென்றவர் பலி
Advertisement
Advertisement
பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.