குடியிருப்புப் பகுதியில் காமராஜர் சிலை! சேலத்தில் பரபரப்பு!!
சேலத்தில் குடியிருப்புப் பகுதியில் தனி நபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவ முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் குடியிருப்புப் பகுதியில் தனி நபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவ முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி தனிநபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட இருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் விரைந்து சென்று சிலையை மூடி சீல் வைத்தனர்.
Advertisement
இதனையடுத்து ஏத்தாப்பூர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.