உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி
உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு கோடாங்கிபட்டியைச் சேர்ந்த முருகன்(50) என்பவர் செல்லம் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், மலையடிவாரத்துள்ள 18 கால்வாய் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது காட்டு யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Advertisement
Advertisement
இது குறித்து கோம்பை காவல் துறையினர் மற்றும் மற்றும் வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.