சென்னை எனும் ஊட்டி! டிரெண்டிங்காகும் சென்னையில் மழை ஹேஷ்டேக்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே மழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே மழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இதனையொட்டி சென்னைரெயின்ஸ் ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும், இணையத்தில் பலரும் சென்னை எனும் ஊட்டி என்று பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
படிக்க | சென்னை, புறநகரப் பகுதிகளில் பரவலாக மழை!
Advertisement
Advertisement
சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, அமைந்தகரை, விருகம்பாக்கம் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, குன்றத்தூர், மதுரவாயல், வானகரம், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மழை (#ChennaiRains) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனை சென்னை எனும் ஊட்டி என்று குறிப்பிட்டு இணையதளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.