சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை அடையாளம் காணும் வசதி அறிமுகம்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருநாதால், பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்தே அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருநாதால், பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்தே அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறுத்து விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
வெளிநாடு, வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது உடைமைகளை, சம்மந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்புவர்.
அவ்வாறு அனுப்பப்படும் உடைமைகள், பாதுகாப்பு சோதனை முடிந்த பின்னர், விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பு சோதனையின்போது அந்த உடைமைகளில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பயணியை அழைத்து அதை வெளியே எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | முற்றிலும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்!
மேலும், தற்போது, பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்தவாறே, தங்களது உடைமைகளை, பயணிகள் அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விடியோ வாயிலாக உடைமைகளை அடையாளப்படுத்தி, அவர்கள் அனுமதியுடன் அவர்கள் கண் முன்பே தடை விதிக்கப்பட்ட பொருள்கள் அகற்றப்படும்.
இதன் மூலம் பயணிகளும் நேரம் விரயம் தடுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.