FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய முதல்வர் கன்ராட் சங்மா பிரார்த்தனை

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.

Updated On : 14 மார்ச் 2023, 12:14 pm IST
வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய முதல்வர் கன்ராட் சங்மா குடும்பத்தினருடன் பிரார்த்தனை
பகிர்:

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா செவ்வாய்க்கிழமை புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து சாலை வழியாக காரில் வேளாங்கண்ணி வருகை புரிந்தார். அவருக்கு பேராலய அதிபர் இருதயரஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேராலயத்தில்  மனைவி மெஹ்தாப், தாய், சகோதரர்  மற்றும் குடும்பத்தினருடன் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா மாதாவை தரிசனம் செய்தார். 

பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் அவருக்கு புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தனர். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலய முதல்வர், சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து, விமானம் மூலம் பெங்களூரு செல்ல இருக்கிறார். 

மேகாலய மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments