முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை வருவாய் திமுக ஆட்சியில் அதிகரிப்பு: அமைச்சர்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

Updated On : 29 மே 2023, 8:01 pm IST
அமைச்சர் சிவசங்கர் (கோப்புப்படம்)
பகிர்:

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

இதில் பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

கேரளத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பகுதி நேர வேலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது.

இதனால், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்னை குறைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments