FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்

நாட்டில் உரிமைக்காக போராடும் நிலையே தற்போதும் உள்ளது என முதல்வர் மு.க. மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 நவம்பர் 2023, 12:34 pm IST
முதல்வர் மு.க. மு.க. ஸ்டாலின்
பகிர்:

நாட்டில் உரிமைக்காக போராடும் நிலையே தற்போதும் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று  (நவ. 27) திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

Advertisement

Advertisement

நாட்டில் உரிமைக்காக போராடும் நிலை தற்போதும் உள்ளது. கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டிய நிலையே உள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பட்டியலின பழங்குடியின இடஒதுக்கீடுகளை முறைப்படுத்த வேண்டும்.

எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறிக்கும் மருந்துதான் சமூக நீதி.

சமூக நீதி காவலர் வி.பி. சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி, விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகளை, அரசியல் செயல் திட்டமாக மாற்ற உறுதியேற்போம். 

வி.பி. சிங் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூக நீதி தீபம் மறையாது. எந்த மாநிலம் மறந்தாலும் தமிழ்நாடு வி.பி. சிங்கை மறக்காது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments