FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.

2 பிப்ரவரி 2024, 8:39 am IST
சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பகிர்:

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிா் அணி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி முன்னிலை வகிக்கிறாா்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவா் சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா, பிகாா் அமைச்சா் லேஷி சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகளிரணி பொதுச் செயலா் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு பெண் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

Advertisement

Advertisement

இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். 

5 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி தமிழ்நாடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments