சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு!
சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது பற்றி....
சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
சிக்கிம் மாநிலம், தீஸ்தா மற்றும் சியாகூங் நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே, தெங் சுரங்கப்பாதைக்கு எதிரே உள்ள நாகா வனப்பகுதியில், புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகா-டோசா சாலையை ஒட்டியுள்ள மலையின் பெரும் பகுதி சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலச்சரிவால் இரண்டு நதிகளின் நீரோட்டமும் பகுதியளவு தடைபட்டுள்ளது என்று அவர்கள் மேலும் கூறினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அதேசமயம், பொருட்சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்கலாங் மற்றும் பிடாங் புறக்காவல் நிலையப் பகுதிகளில் நதியின் நீர்மட்டம் தற்போது இயல்பாகவே உள்ளது. நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அதில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
A massive landslide hit Sikkim's Mangan district in the early hours of Sunday, partially blocking the flow of two rivers, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.