முகப்பு
பலியான சிறுமி.
தமிழ்நாடு

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

ஆவடியில் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

தமிழ்நாடு

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

ஆவடியில் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 10:47 PM
பலியான சிறுமி.
பகிர்:

ஆவடியில் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

ஆவடி அருகே நந்தவன மேட்டூர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கெüதம். இவரது மனைவி பிரியா. இத்தம்பதி மகள் ரூபாவதி (5) (படம்). இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ரூபாவதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் பிரியா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். ரூபாவதி சமையலறைக்குச் சென்று அங்கிருந்த குளிர்பதனப் பெட்டியை (பிரிட்ஜ்) திறந்தபோது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ரூபாவதி தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து தாய் பிரியா, மகளை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஆவடி போலீஸார் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →