ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது 
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.

DIN

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது. ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகின்றது. குளிர்ந்த காலநிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது வேலூா் அரசு பன்நோக்கு மருத்துவமனை

தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை; பாலாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு புதன், வெள்ளிக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள்

ரவணசமுத்திரத்தில் தெருக்களுக்கு பெயா் மாற்றம்: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

SCROLL FOR NEXT