முகப்பு
தமிழ்நாடு

நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 100-வது பிறந்த நாள்.

Updated On : 26 டிசம்பர் 2024, 10:48 am IST
நல்லகண்ணுவுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

“பொதுவுடைமை அமைப்புக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது.

நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற உறுதுணையாக பக்கபலமாக இருப்பவர் நல்லகண்ணு.

அமைதியாக, அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர் நல்லகண்ணு. தொடர்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல நிரந்தரக் கூட்டணி. தற்போதைய சூழலில், 200 அல்ல அதற்கு மேலும் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments