முகப்பு
தமிழ்நாடு

ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை: புதிய காவல் ஆணையர் அருண் அதிரடி!

ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆணையராக பொறுப்பேற்ற அருண் கூறினார்.

Updated On : 8 ஜூலை 2024, 4:11 pm IST
காவல் ஆணையர் அருண்
பகிர்:

சென்னை: சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி, ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்ற அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் இன்று சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

Advertisement

Advertisement

அப்போது, சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி. சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை கண்டுபிடிக்க, போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.

ரௌடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கையான எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments