முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை: பிரபல ரௌடி என்கவுண்டர்

ரௌடி துரைசாமியின் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன

Updated On : 11 ஜூலை, 2024 at 8:40 PM
என்கவுண்டர் செய்யப்பட்ட ரௌடி துரைசாமி
பகிர்:

புதுக்கோட்டையில் பிரபல ரௌடி துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரௌடி துரைசாமி, புதுக்கோடையின் திருவரங்குளம் வம்பன் தைலமரக் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் துரைசாமி பிடிக்கச் சென்றிருந்தனர்.

காவல்துறையினர் துரைசாமியை சுற்றிவளைக்க முயன்றபோது, காவல் அதிகாரி ஒருவரை துரைசாமி அரிவாளால் வெட்ட முயன்றதில், காவல் அதிகாரி காயமடைந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற துரைசாமி காலில் காவல் ஆய்வாளர் முத்தையா துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும், துரைசாமி தப்பிக்க முயன்றதால், மார்பில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரௌடி துரைசாமியின் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் ஏராளமான திருட்டு வழக்குகள் என 74 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தான், 2022ல் உயிரிழந்த பிரபல ரௌடி இளவரசன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி எனக் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில் திருட்டு வழக்கிற்காக நீதிமன்றம் அழைத்துச் சென்றபோது ஆய்வாளர் உள்பட 5 காவலர்களைத் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினர் துரையின் காலில் சுட்டதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார்.

சமீபத்தில் காவல் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.