முகப்பு
தமிழ்நாடு

பரோலில் தப்பிய ஆயுள் கைதிக்கு கூடுதல் தண்டனை தேவையில்லை: விடுதலை செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

பரோல் காலத்தில் தப்பிச் சென்ற்காக தண்டிக்கத் தேவையில்லை என்று கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 ஜூலை 2024, 5:25 am IST
சென்னை உயா் நீதிமன்றம்
பகிர்:

21 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதியை பரோல் காலத்தில் தப்பிச் சென்ற்காக தண்டிக்கத் தேவையில்லை என்று கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியைச் சோ்ந்த ரவி என்பவருக்கு கொலை வழக்கில் 2003-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு அவருக்கு ஆறு நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் அவா் தலைமறைவானாா். பின்னா் அவா், 326 நாள்களுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டாா். பரோல் முடிந்த பின் மீண்டும் சரணடையாதது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 2003-ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக தற்போது வரை சிறையில் உள்ள அவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என நன்னடத்தை அதிகாரி பரிந்துரை அளித்துள்ள நிலையில், பரோல் காலத்தில் தப்பிச் சென்றாா் என்பதற்காக முன்கூட்டியே அவரை விடுதலை செய்யும் சலுகையை மறுக்க முடியாது எனக் கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என புதுச்சேரி சிறைத் துறை தலைமைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments